2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 கைதிகள் விடுதலை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

சிறைக்கைதிகள் தினத்தை  முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 18 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில், சிறுகுற்றங்கள் இழைத்து தண்டப்பணம் செலுத்தமுடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 18 பேர் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .