2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                             (வ.சக்திவேல்)

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 15 வயதான யோகதர்சன் என்பவரே தலையில் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞன் மீது மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .