2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி மூவர் காயம்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு காங்கேயனோடையில் இன்று மின்னல் தாக்கியதால் மூவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேயனோடை ஈரான் வீட்டுத்திட்டத்தில் பணியாற்றிய மூன்று மேசன் தொழிலாளர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இவர்கள் தகரக் கொட்டிலொன்றில் இருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ளது. இவர்கள் திருக்கோவில் மற்றும் மல்வத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

எரிகாயங்களுக்குள்ளான இம்மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X