2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 02 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் டொக்டர் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.

பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உழவு வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது இம்மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்துவருவதால் விதைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .