2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டு. தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை உட்பட காத்தான்குடி களுவாஞ்சிக்குடி வாழைச்சேனை ஆதார வைத்திசாலைகள் மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வைத்தியசாளையின் பணிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இதனை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் கிளை செயலாளரும் தேசிய இணைப்பாளருமான கே.ஜகநீதன் தெரிவித்தார்.

சம்பள உயர்வு மேலதிக நேரக்கொடுப்பனவு உட்பட பல அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் இடம் பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X