2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர், நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்க்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து புதிய கர்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில், காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேசநபர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபரையும் கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X