2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், பா.திருஞானம்

கொத்மலை, இறம்பொடை கையிறுக்கட்டி தோட்டத்தில் அண்மையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகள் அமைத்துகொடுக்கப்படவுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(6), இறம்பொடை கையிறுக்கட்டி தோட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், மாநகர சபை உறுப்பினர் எல்.நேருஜி, மனித வள அபிவிருத்தி நிதியத்தின்; தலைவர் முன்னாள் அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .