2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அனுமதிபத்திரமின்றி மணல் அகழ்ந்த 13 பேர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

வில்கமுவ-துணுவில பிரதேசம், மஹாவலி கங்கையில் அனுமதிபத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதன்கிழமை (13) கைதுசெய்த 13 பேரையும், தம்புள்ளை பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து , மேற்படி பகுதிக்கு விரைந்த பொலிஸார், மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மேற்படி 13 பேரையும் கைதுசெய்யதுடன் மணல் மற்றும் மணலை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்திய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .