2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கஞ்சா, ஹெரோயினுடன் மூவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 மே 25 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 18,23,42 வயதுடைய மூவரை,  பதுளை பொலிஸார், புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பதுளை, பதுலிபிட்டிய பிரதேசத்தில், 9 மில்லிகிராம் கஞ்சாவுடன் பதுலிபிட்டியவைச் சேர்ந்த 18 வயது சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, பதுளை வெலேகடே பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் வைத்து, 2 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த,  லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனை,  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே, மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், பதுளை நீச்சல்தடாகத்துக்கு அருகில் வைத்து, 2 கிராம் கஞ்சாவுடன் பதுளை மலியமந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .