2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவரசன்

பசறை பிரதேச பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த  நூறு மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (13) பசறை தமிழ் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பசறை பிரதேச திவிநெகும திணைக்களத்தின் பிரதான முகாமையாளர் ரோஹன சமிந்த, வங்கி முகாமையாளர் ஸ்ரீலதா, பசறை பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் ஷிரோமி வித்தாரண உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை கையளித்தனர்.

பசறை தமிழ் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களாகிய பசறை    'திவிநெகும' வாழ்வின் எழுச்சி திணைக்கள உத்தியோகத்தர் வீ.அன்பழகன் மற்றும்  குழந்தைவேல் ஆனந்தநாதன் ஆகியோரின் முயற்சியினால் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .