2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்வியியல் கண்காட்சி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை தேசிய பாடசாலை மாணவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'கல்வியியல் கண்காட்சி' இன்று செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமாகியுள்ளது.

பாடசாலையின் அதிபர் என்.டி.ஏ. பண்டாரவின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இக்கண்காட்சி நடைபெறுகின்றது. 

விஞ்ஞானம், கணிதம் மற்றும் மனைப்பொருளியல் போன்ற மாணவர்களது திறன் மிக்க படைப்புக்கள் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இலவசமாக அனைவருக்கும் பார்வையிடக்கூடிய இக்காட்சி, நாளை புதன்கிழமையும் (30) நடைபெறவுள்ளதுடன், சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான தமிழ் ஆய்வுகூடமும் இதில் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .