2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கேகாலையில் சர்வதேச மாணவர் மற்றும் மகளிர் தினம்

Kogilavani   / 2016 மார்ச் 28 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மாணவர் தினம் மற்றும்   மகளிர் தினம் நிகழ்வு,  கேகாலை அம்பன்பிட்டிய  தமிழ் வித்தியாலயத்தில் எதிர்;வரும்  நாளை(30)  பி.ப.2.00.மணிக்கு  இடம்பெறவுள்ளது.

சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர்  எஸ்.பி.அந்தோனிமுத்துவின்  வழிகாட்டலி;ல் கேகாலை  வலய  கல்வி பணிப்பாளர் என்.சிரிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான கண்டி இந்திய உதவிததூதுவர்;   ராதா வெங்கட்ராமன் பிரதம அதிதியாக  கலந்துக்கொள்வார்.   

கேகாலை நகருக்கு முதன் முறையாக வருகைத்தரும் இந்திய உதவித்தூதுவர்; ராதா வெங்ட ராமனுக்கு வருகைக்காக, நகர தமிழ் வர்த்தகர்களும் கேகாலை  ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர்; எஸ்.சிவலிங்கம்பிள்ளை தலைமையிலான குழுவினரும் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வின்போது, அமைதி, சமாதானம் சகவாழ்வுக்கான  விசேட ஆன்மீக வழிபாடுகளும் நடத்தப்படவுள்ளன. பூஜை வழிப்பாடுகளை ஆலய பிரதம குரு தியகராஜ சர்மா நடத்தவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .