2024 மார்ச் 28, வியாழக்கிழமை

48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

கலஹா, டுனாலி, மல்பேரி பிரிவு கிராமத்தில் பாரிய நிலவெடிப்புக் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், டுனாலி தமிழ் வித்தியாலத்தில் தற்காலிகமாக தங்;க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பல இடங்களில்; பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகளின் சுவர்களிலும் வெடிப்புகள் காணப்படுகின்றன.  
இதனால், அவர்களை குறித்த இடங்களிலிருந்து வெயியேற்றுமாரு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 191 பேரில் 15 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் 68 பேர் உள்ளடங்குகின்றனர்;. பாதிக்கபட்ட 48 குடும்பங்களில் 28 குடும்பங்களை   அவர்களின் குடியிருப்புகளுக்கு மீண்டும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X