2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதுளைக்கு மனோ விஜயம்

எம். செல்வராஜா   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்ற அமைச்சர் மனோ கணேசன், நாளை (31) பதுளைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பதுளைக்கு விஜயம் செய்யும் அமைச்சர், நாளை, நாரங்கலை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ முத்து விநாயகர் கோவிலின் சுவாமி சிலைகளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

மறுதினம் 1ஆம் திகதி காலை நடைபெறும் மேற்படி கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .