2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாத்தளையில் மரக்கறிகளில் விலை சடுதியாக அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை நகர்,  அதனை அண்மித்தப் பகுதிகளில், மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக, நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொகைச் சந்தையில் கரட், கோவா, போஞ்சி, பச்சைமிளகாய் உள்ளிட்ட மரக்கறிகள்,  கிலோ ஒன்று 150 முதல் 200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் மரக்கறிகளின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மழை காலநிலை, வெள்ளம் காரணமாக மரக்கறிச் செய்கைகள் நாசமடைந்ததே, விலை ஏற்றத்துக்குக் காரணம் என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X