2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 25 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்போன் கிளவட்டனில், புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், வட்டவலை பொலிஸ் நிலைய  பொலிஸ் அதிகாரி, பாடுகாமடைந்த நிலையில், நாவலப்பிட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர். 

ஹட்டனிலிருந்து சென்ற முச்சக்கரவண்டியும், நோட்டனிலிருந்து  வந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரியே, படுகாமயடைந்துள்ளார்.

இவர்,  டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்

முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .