2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Sudharshini   / 2016 மார்ச் 05 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.புஸ்பராஜ்

நுவரெலியா, வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா பொல்காவங்குவ சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை, பொரலந்த பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்று, பிரதான வீதியில்; குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்துக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .