2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் 10 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த 10 பேர் கண்டி- தலாத்துஓயா பிரதேசத்தில் வைத்து நேற்று (16) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 4.542 மில்லிகிராம் ஹெரோய்னும் 2,30,350 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களுள் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் கண்டி, அம்பிட்டிய, பேராதனை, அமுனுகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .