2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டியில் சில தினங்களாக கடும் மழை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது. கண்டி பெரஹரா நடைபெறும் காலத்தில் இவ்வாறு மழை பெய்வதனால் பெரஹராவை பார்வையிட வந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த இரு தினங்களாக இரவு பகலாக செய்துவரும் கடும் மழையினால் மாவட்டத்தில் பல வீடுகள் மீது மரங்கள், கல், மண் போன்றவை விழுந்து அவ்வீடுகள் சேதமாகியுள்ளன. அத்துடன், பல வீதிகளில் வாகன போக்குவருத்து நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .