2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பின்னவலையில் மிருகக்காட்சிச் சாலை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையில் மிகப்பிரசித்தி பெற்ற யானகள் சரணாலயமான கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவலையில் திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரின் முயற்சியினால் இது மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னவலை யானைகள் சரணாலயத்தை அண்மித்தே இம்மிருகக் காட்சிச் சாலை ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கென 45 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளது.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கரண்டுபன சந்தி முதல் பின்னவலை வரையான பகுதியில் 200 மில்லியன் ரூபாய் செலவில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இது நீளத்தில் சுமார் 6௭ கிலோமீற்றர் வரையான அளவைக் கொண்டது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .