2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலையக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவில்லை - இராதாகிருஷ்ணன் எம்.பி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

இ.தொ.கா நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணியுடன் இணையவிருப்பதாக சில பத்திரிகைகளில் வெளியான செய்தி தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என வேலுசாமி இராதாகிருஸ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் யாருடனும் அண்மையில் இது தொடர்பில் கலந்துரையாடவே தொடர்புகொள்ளவோ இல்லை அப்படி நான் அரசியல் ரீதியான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொழுது நேரடியாக ஊடகங்கள் வாயிலாக எனது வாக்காளர்களுக்கு அறியத்தருவேன். நான் எனது வாக்காளர்கள் மனது புண்படும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன்" என அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .