2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மலையகத்தில் கடும் மழை

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடை மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா,கண்டி ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் அடை மழை பெய்தது.

நாவலப்பிட்டி பகுதியில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை பெய்த அடை மழையினால் நாவலப்பிட்டி நகரின் கண்டி வீதியில் வெள்ளம் பரவியது. இதனால் நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கான வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது. அத்துடன் நகரின் வங்கிகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் சில சேதங்கள் ஏற்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .