2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்சரிவு அபாயம்

Super User   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்னா பரணமன்ன)

மாத்தளை உக்குவெல பகுதியில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுவதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளதுடன்  அங்குவசிப்பவர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு, நிலைமையை அவதானித்து வருவதாகவும் அப்பகுதியில் மண்சரிவுக்கான உயர் அபாயம் இருப்பதாகவும் அவ்வமைப்பின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. பி.எவ். பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை நுவரெலியா புரோட்டோவ் தோட்டத்திலும் கெடபுலவாவ தோட்டத்திலும் இன்று அதிகாலை இரு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .