Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக், எம்.எப்.எம். தாஹிர்)
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை 4 மணிக்கு கண்டி தலதா மாளிகை முன் பௌத்த பிக்குமார்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சத்தியாக்கிரகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, கோட்டே நாக விகாராதிபதி வண. மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் தம்பர அமில தேரர் உட்பட மஹாசங்கத்தினரும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி இன்று மாலை 4 மணியளவில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதனை ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி கோஷங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு கறுப்புப் பட்டிகளை கட்டியிருந்தனர். இதன்போது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த்த வித்யாரத்ன உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
41 minute ago
2 hours ago