2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில ஆசிரியர்பயிற்சி நிலையம் அமைக்க இந்திய அரசு தீர்மானம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராவின்)

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஆங்கில ஆசிரியர் பயிற்சி நிலையங்களை அமைக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் மிஸ்ரா கூறினார்.

முக்காண முதலமைச்சின் பணிப்புரைக்கமைய கடந்த 22ஆம் 23ஆம் திகதிகளில் வரக்காபொல, துல்கிரிய வெகுசன முகாமைத்துவ தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாகாண அதிபர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறு பயிற்சி பெறுபவர்களைக் கொண்டு இலங்கையில் பயிற்சி வழங்கப்படுவதுடன் ஆங்கில அறிவுடன் தகவல் தொழில்நுட்ப அறிவும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .