2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசர் நாய் கடித்து ஒருவர் பலி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீப்தீன்)

விசர் நாய்கடிக்குள்ளாகி  கல்தொட்ட வைத்தியாசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளதாக கல்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

அப்புஹாமி வயது (46) என்ற நபரே இவ்வாறு உயிரழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சமுர்த்தி அதிகார சபையின் அதிகாரியென்று  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசர்நாய் கடிக்குட்பட்ட நிலையில் கல்தொட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட இவர் இரண்டு நாட்களின் பின்  உயிரழந்ததாகவும், விசர்நாய் கடித்ததே அவரது மரணத்திற்கு காரணமென வைத்தயசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்தொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X