2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

காதலர்களிடம் பணம் பறித்த முன்னாள் இராணுவ வீரர் கைது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் காதல் செய்வதற்காக வரும் வெளிப்பிரதேசங்களை சேர்ந்த  இளம் ஜோடிகளை பயமுறுத்தி பணம் பறித்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கண்டி நகரில் சில மறைவான இடங்களில் காதல் சேஷ்ட்டைகளில் ஈடுபடும் கிராமப்புர இளம் ஜோடிகளை பயமுறுத்தியே இவர் பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதுடன் திட்டமிட்டு நடத்தப்படும் இக்கொள்ளைகளுடன் மேலும் சம்பந்தபட்டவர்கள் இருக்கின்றார்களா என்பதை பற்றியும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .