2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கொத்மலையில் நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஜனாதிபதியின் பிறந்தத் தினம் மற்றும் இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொள்ளல் என்பனவற்றை முன்னிட்டு கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

சமுர்த்தி பயனாளிகளுக்கான விவசாய உபகரணங்கள் மற்றும் தையல் இயந்திரங்களை வழங்குதல், கிராம எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தோட்டப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளுக்கான 200 இலட்சம் பெறுமதியான வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ரமேஸ், குமாரதசநாயக்க, கொத்மலை பிரதேச செயலாளர் மோஹனஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .