2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பரீட்சையை பிற்போடுமாறு ஆசிரியர் பயிலுநர்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஆசிரியர் கலாசாலைகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்காக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இறுதியாண்டுப் பரீட்சையினைத் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பிற்போடுமாறு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக மலையகப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களுக்கும் இந்தப்பரீட்சை இடம்பெறவுள்ளதால் தற்போதைய காலநிலையைக் கருத்திற்கொண்டு இந்தப்பரீட்சையைப் பிறிதொரு தினத்தில் நடத்துமாறு மலையகப் பகுதிகளைச்சேர்ந்த ஆசிரியர்களும் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X