2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உள்ளூராட்சி தேர்தலில் தொழிலாளர் விடுதலை முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து போட்டி

Super User   / 2011 ஜனவரி 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலாளர் விடுதலை முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முன்னணியின் செயலாளரும் ஜனாதிபதியின் பெருந்தோட்ட பகுதி அமைப்பாளர் எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த மற்றும்  அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளிலும் ஹட்டன் - டிக்கோயா, தலவாக்கலை – லிந்துலை ஆகிய நகர சபைகளிலும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தீர்மானித்தள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சபைகளுக்கான தேர்தலில் தொழிலாளர் விடுதலை முன்னணி  சார்பாக ஒவ்வொரு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக எஸ்.அருள்சாமி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .