2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாகன விபத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐவர் படுகாயம்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதமர். டி.எம். ஜயரட்னவின் பாதுகாப்பு பிரிவினர் பயணித்த  பிக்அப் வாகனம் விபத்தில் சிக்கியதில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கம்பளை - தொலுவை பிரதான வீதியில் நாரங்விட எனும் இடத்தில் இடம்பெற்றது. பிக்அப் வாகனம் பாதையை விட்டு விலகியமையாலேயே விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்கள் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X