2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லொறியில் ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சிறிய லொறியொன்றில் 14 ஆடுகளை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மிருகவதை சட்டத்தின் கீழ் இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மிகவும் சிறிய லொறியொன்றில்; இவ் ஆடுகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவை துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X