2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பொகவந்தலாவைப் பிரதேசத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட 11 வர்த்தர்களுக்கெதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட செயலாளரின் ஆலோசனைக்கேற்ப பொகவந்தலாவை பிரதேசத்தில் திடீர் பரிசோதனை ஒன்றில் ஈடுபட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவினர் நிர்ணயித்த அரிசி விலையை விட கூடுதலான விலையில் அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களை இனங்கண்டுள்ளனர். இவர்களுக்கெதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .