2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'சிங்கள மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடுகளை புரிந்து கொள்கின்றனர்'

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். ஏம்.எம். ரம்ஸீன்)

போருக்கு பின்னரான  அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடுகளை  தெளிவாக புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கம்பளை நகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று செவ்வாய்க்கிழமை கம்பளை, கல்கெடியாவையில் நடைபெற்ற பெரும்பான்மையின ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கடந்த காலங்களில் தவறாக புரிந்து கொண்டிருந்த பெரும்பான்மையின சிங்கள  சகோதரர்கள் பலர் இக்கட்சியை தற்போது சரியா புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இது போருக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையில் பெரிதும் சாத்தியமாகி வருகின்றது என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • ameer Wednesday, 02 March 2011 01:42 PM

    ஹகீம் அரசியல் வங்குரோத்து இன்னும் சில காலங்களில் தெரியவரும்.
    அமீர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .