2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மனை பொருளியல் திட்டத்தின் பதுளை மாவட்ட அங்குரார்பண நிகழ்வு

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

மனை பொருளியல் அலகுகள் பத்து இலட்சத்தை ஸ்தாபிக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் பதுளை மாவட்ட அங்குரார்;பண நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, ஊவா மாகாண ஆளுநர் சீ. நந்த மெதிவ், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குகொண்டனர்.

பதுளை மாவட்ட அரச அதிபர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க மாவட்ட நிகழ்ச்சி திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .