2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணிக்கக்கல் அகழ்ந்த எழுவர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 13 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரை விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நோர்வூட் நிவ்வெளி தோட்டத்துக்கு அருகிலுள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அருகில் நீண்டகாலமாக சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டடள்ளதாகவும் இவர்களை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நோர்வூட் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X