2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீமெந்து ஏற்றிவந்த கன்டர்ரக வாகனம் விபத்து

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றிவந்த கன்டர்ரக வாகனமொன்று அக்குறணை ஏழாம் கட்டையிலுள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளானது.

இன்று செவ்வாய்க்கிழமை காலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்து காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்புக்கள் ஏற்படாதபோதிலும், வீடும் வர்த்தக நிலையமும் சேதமடைந்துள்ள அதேவேளை, கன்டர்ரக வாகனமும் சேதத்திற்குள்ளானதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X