2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டுத்தோட்டத்தில் கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 18 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ஃபாத்)

இரகசியமாக வீட்டுத்தோட்டத்தில் கஞ்சாச் செடிகளை வளர்த்ததாகத் தெரிவிக்கப்படும் நபரொருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபரைக் கைதுசெய்த கண்டி போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு பொலிஸார், அவரிடமிருந்து 80 கிலோகிராம் நிறையுடைய இரண்டு கஞ்சாச் செடிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கண்டி கொஹாகொட பகுதியிலுள்ள வீட்டுத்தோட்டமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது கஞ்சாச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .