2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து தோட்டாக்கள் மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                              (சி.எம்.ரிஃபாத்)
கண்டி நகரில், குப்பைத் தொட்டியொன்றிலிருந்து ரி 56 ரக தோட்டாக்கள் 30 கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள குப்பைத் தொட்டிக்குள்ளிருந்தே இந்த தோட்டாக்கள் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான  உரப் பையொன்றை அவதானித்த இராணுவ வீரர் ஒருவர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த  உரப் பைக்குள் தோட்டாக்கள் இருந்தமை தெரியவந்ததுடன், அவற்றை கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த தோட்டாக்கள் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .