2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டவிரோத மதுபான தயாரிப்பு இடங்கள் முற்றுகை

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, யட்டவத்த பிரதேச மலைப் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்ட இரு இடங்களை யட்டவத்தை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த இடங்களில் இருந்து மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை நகர் உட்பட பல பிரதேசங்களுக்கு சட்டவிரோதமான முறையில் குறித்த இடங்களிலிருந்து தயாரிக்கப்படும் மதுபானங்களே வினியோகிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .