2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தம்புள்ளையில் மழை வேண்டிப் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மழை கிடைக்க வேண்டி பௌத்த சமய பிரார்த்தனை தம்புள்ளையில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

மத்திய மலையக பிரதேசங்களுக்கு  கடந்த சில காலமாக போதியளவு மழை கிடைக்காததன் காரணமாகவே இப்பிரார்த்தனை நடைபெற்றது.                  

தம்புள்ளை ரஜமகா விகாரையைச் சேர்ந்த மகா சங்கத்தினர் இதில் பங்குகொண்டனர்.

தம்புள்ளை,  இனாமலுவை சுமங்கல தேரரின் ஆலோசனையின் படி இப்பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டது.  கிராமங்கள் தோறும் சென்ற குழுவினர் பிரித் ஓதிய நீரை தெளித்து மழைக்காக பிரார்த்தித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X