2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொகவந்தலாவயில் வெள்ளம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கொட்டியாகலை தோட்டப் பிரிவில் ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எனினும், தற்போது வெள்ள நீர் வடிந்தோடியுள்ளதாகவும் குடியிருப்புக்களுக்கும் மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .