2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மொஹொமட் ஆஸிக்

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவரது,  சுவரொட்டிகளை ஒட்டிய இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 567  சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி , வத்துகாமம் வீதி,  நவயாலதென்னை பகுதியில் வைத்தே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை, கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .