2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வான் விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சுஜிதா

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற வானொன்று, 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டட்டுள்ளனர்.

வான் சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமென தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .