2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 3பேர் காயம்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று பதுளை-மஹியங்கனை வீதியில் தல்தென்ன 11 மைல்கல்லுக்கு அருகில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்தவிபத்தில் காயமடைந்த மூவரும் மீஹககிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விறகு ஏற்றிச்சென்ற கரத்தைக்கு இடம்கொடுப்பதற்கு முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸில் 35 பயணிகள் பயணித்ததாகவும் பஸ் 20 அடி பள்ளத்தில் விழுந்து பலாமரமொன்றில் மோதி நின்றமையால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X