2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வீடொன்றில் கொள்ளையிட முற்பட்ட 3 சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் கைது

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அலவத்துகொடை, மாவத்துகெபால பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிடுவதற்கு வந்த மூன்று சந்தேக நபர்களை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் அலவத்துகொடை பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, ரவைகள், கூரிய கத்திகள் உட்பட ஆயுதங்கள் கண்டெடுத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பிளியந்தளை, இங்கிரிய, மற்றும் மாவனெல்லை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X