2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டில் 4 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை -  குருநாகல் வீதியிலுள்ள  வர்த்தக நிலையமொன்றிலிருந்து  400 கிராமுடைய 158  பால்மா பைக்கட்டுக்களையும் 25 கிலோ மைசூர் பருப்பையும் திருடிச்சென்று  பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியரொருவரும் மற்றும் இவரது 3 நண்பர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பால்மா பைக்கட்டுக்களும் மைசூர் பருப்புமே  திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேசப்பிரிய ஜயதிலக்க உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X