2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

43 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாநகரசபைப் பிரிவிற்குள் டெங்கு நுளம்புகள் பரவுமிடங்களை அழிக்காமலிருந்ததாக இனங்காணப்பட்ட 43 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மாத்தளை மாநகரசபை அறிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் டெங்குநோய் பரவலாக பரவும் பிரதேசங்களில் ஒன்றாக மாத்தளை நகரசபைப் பிரிவு இனங்காணப்பட்டுள்ளது.

மாத்தளை மாநகரசபை, மாவட்ட சுகாதார திணைக்களம், மாவட்ட செயலகம், மற்றும் மாத்தளை பொலிஸார் உட்பட்ட அதிகாரிமட்டக் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையின்போதே மேற்படி நுளம்பு பரவுமிடங்கள் இனம்காணப்பட்டுள்ளது.

டெங்குநோயைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் ஒரு திட்டமாக மாத்தளை முழுவதும் அதிகாரிகளின் பரிசோதனை தொடர்ந்து நடைபெறுவதாக மாத்தளை மாநகரசபை அறிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .