2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதுளையில் நேற்றிரவு 7 கடைகளில் கொள்ளை

Kogilavani   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                   (எம்.எச்.எம்.தாஹிர்)
பதுளை பசறை நகரத்தில் நேற்றிரவு 07 கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்தான விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.

கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் நேற்றிரவு 9 மணிக்குப்பின் கடைகளை பூட்டிச் சென்றப்பின்பே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இன்று காலை கடைகளை திறப்பதற்காக வந்தப்போது கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை அறிந்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .