2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை குருகொடை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பேரை அலவத்துகொடை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து  நீண்ட காலமாக நடத்தப்பட்ட இச்சூதாட்ட நிலையத்தை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

இவ்விடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பேர்களை கைது செய்ததுடன்  ஒரு தொகைப் பணமும் இதற்காக பயன்படுத்தும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மாலை கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸின் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு  தெரிவித்தார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X